Home தாயகச் செய்திகள் இனிய பாரதியின் சகா ஒருவர் கைது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இனிய பாரதியின் சகா ஒருவர் கைது!

Share
Share

இனிய பாரதியின் சகா ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தொப்பிமனாப் என்றழைக்கப்படும் திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான சி.விக்கினேஸ்வரனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இன்று(27) மாலை அவர் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

முன்னதாக, கடந்த ஆறாம் திகதி இனிய பாரதி கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காகக் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். 

இந்த கைதையடுத்து இனிய பாரதியின் முன்னாள் சாரதி கடந்த 9 ஆம் திகதி கல்முனை நகரில் வைத்துக் கைதுசெய்யப்பட்டிருந்தார். 

கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், நேற்று பிற்பகல் இனிய பாரதியின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டு சோதனை செய்யப்பட்டது. 

அவ்வாறே தம்பிலுவில் பிரதான வீதியில் இயங்கி வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முகாம், தம்பட்டையில் இயங்கி வந்த முகாம், திருக்கோவில் மயானம் போன்றவையும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

இந்த நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த இனிய பாரதியின் மற்றுமொரு சகாவான திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி விக்கினேஸ்வரன் அவரது வீட்டில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சம்பூரில் மனித என்பு எச்சங்கள்: அகழ்வு செய்வதா? இல்லையா? ஓகஸ்ட் 6 ஆம் திகதி விசேட கூட்டம் – மூதூர் நீதிமன்றம் இன்று தீர்மானம்!

திருகோணமலை, சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து அகழ்வு செய்வதா? இல்லையா? என்பதைத்...

கொள்ளையர் சங்கிலியை அறுத்தபோது படுகாயமுற்ற வயோதிப மாது உயிரிழப்பு – மட்டு நகர் நல்லையா வீதியில் சம்பவம்!

மட்டக்களப்பு நகரில் வீட்டின் முன் வீதியைத் துப்பரவு செய்து கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில்...

சிறிய எலும்புக் கூட்டுத் தொகுதியை அணைத்தபடி பெரிய எலும்புக் கூட்டுத் தொகுதி மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்று புதிதாக 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்...

நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் 22 பேர் தொடர்பான வழக்கு:ஓகஸ்ட் 28 ஆம் திகதி தீர்ப்பு!

யாழ். நாவற்குழிப் பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் 22 பேர்...