Home தாயகச் செய்திகள் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழில் போராட்டம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழில் போராட்டம்!

Share
Share

இந்திய மீனவர்களின் சட்டவிரோத அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி நேற்று யாழ்.நகரில் போராட்டம் நடத்தப்பட்டது.

நேற்று காலை யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த போராட்டம் பண்ணை பகுதியில் உள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலகத்தின் முன்பாக ஆரம்பமாகி யாழ்ப்பாண மாவட்ட செயலகம் வரை இடம்பெற்றது.

இதன் போது, மாவட்ட அரசாங்க அதிபரிடம், மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்திய துணைத் தூதரம், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் ஆதியவற்றிலும், மீனவர்களால் மகஜர் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, நேற்றைய போராட்டத்தில் பங்கேற்ற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், யாழ். மாவட்ட செயலகத்தில், அரசாங்க அதிபரை சந்தித்து, வட பகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...