Home தாயகச் செய்திகள் இந்தியாவில் இருந்து இலங்கையர் ஒருவரை ஏற்றி வந்த படகு கடற்படையினரிடம் சிக்கியது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

இந்தியாவில் இருந்து இலங்கையர் ஒருவரை ஏற்றி வந்த படகு கடற்படையினரிடம் சிக்கியது!

Share
Share

இந்தியாவில் இருந்து இலங்கையர் ஒருவரை ஏற்றி வந்த படகு மன்னார் கடற்பரப்பில் கடற்படையினரிடம் சிக்கியுள்ளது. இதன்போது அந்தப் படகில் இருந்த இலங்கையர் உட்பட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் இராமேஸ்வர் தனுஸ்கோடியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரும், இலங்கையையின் நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவருமே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் பயணம் தொடர்பில் பெரும் சந்தேகம் காணப்படுவதால் அவர்களைக் கடற்படையினர் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

விசாரணையின் பின்னர் இன்று மன்னார் பொலிஸார் ஊடாக அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாமல் மாலைதீவிலிருந்து நாடு திரும்பினார்!

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

செம்மணியில் மேலும் 03 எலும்புக் கூட்டுத் தொகுதிகள்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்று திங்கட்கிழமை புதிதாக 03...

இரண்டு வாரங்களாக யாழில் மாணவியைக் காணவில்லை!

பாடசாலைக்கு சகோதரனை ஏற்றச் சென்ற மாணவி காணாமல் போயுள்ளதாக தாயார்யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம்,...

யாழ்.பல்கலையின் கிளிநொச்சி வளாக பாதுகாப்பு காவலர் சடலமாக மீட்பு!

யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் பாதுகாப்புக்கடமையில் இருந்த காவலர் நேற்று திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். அறிவியல்...