Home தாயகச் செய்திகள் ஆலையடிவேம்பில் தமிழரசின் மத்திய குழுக் கூட்டம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஆலையடிவேம்பில் தமிழரசின் மத்திய குழுக் கூட்டம்!

Share
Share

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆலையடிவேம்பில் நடைபெற்றது.

கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், ச.குகதாசன், இராசமாணிக்கம் சாணக்கியன், கவீந்திரன் கோடீஸ்வரன், ஞா.சிறிநேசன், வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கை மீது கொண்டுவரப்படவுள்ள  பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளின் பிரேரணை வரைபு தொடர்பில் இதன்போது கலந்துரையாடல் நடைபெற்றது.

கட்சி சார்ந்த பல பிரச்சினைகள், மாவட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது  பேசப்பட்டன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...