Home தாயகச் செய்திகள் ஆலையடிவேம்பில் தமிழரசின் மத்திய குழுக் கூட்டம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஆலையடிவேம்பில் தமிழரசின் மத்திய குழுக் கூட்டம்!

Share
Share

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆலையடிவேம்பில் நடைபெற்றது.

கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், ச.குகதாசன், இராசமாணிக்கம் சாணக்கியன், கவீந்திரன் கோடீஸ்வரன், ஞா.சிறிநேசன், வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கை மீது கொண்டுவரப்படவுள்ள  பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளின் பிரேரணை வரைபு தொடர்பில் இதன்போது கலந்துரையாடல் நடைபெற்றது.

கட்சி சார்ந்த பல பிரச்சினைகள், மாவட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது  பேசப்பட்டன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கையில் அனர்த்தம்; ஐ.நா அவவசரகால ஒருங்கிணைப்புச் செயல்முறை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் அனர்த்தநிலைமைக்கு நிவாரணம் அளிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் தனது அவசரகால ஒருங்கிணைப்பு...

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...