Home தாயகச் செய்திகள் ஆனந்த சுதாகரின் பிள்ளைகளை அரவணைக்க தந்தையை விடுதலை செய்யுமாறு கோரிக்கை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஆனந்த சுதாகரின் பிள்ளைகளை அரவணைக்க தந்தையை விடுதலை செய்யுமாறு கோரிக்கை!

Share
Share

தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகர் விடுதலை பெற்று வீடு திரும்பி தனது பிள்ளைகளை அரவணைத்து பாதுகாக்க தமிழ்ச் சமூகமாக நாம் வழிசமைக்க வேண்டும்’, என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள்விடுத்துள்ளது.

ஆனந்த சுதாகரின் மனைவி ஏற்கனவே உயிரிழந்த நிலையில் அவரின் பிள்ளைகள் இருவரும் பேர்த்தியாரின் (தாயாரின் தாய்) பராமரிப்பில் இருந்தனர். இந்த நிலையில், அவர்களின் பேர்த்தியாரான தேவதாஸ் கமலா (வயது 75) நோயால் நேற்று முன்தினம் இரவு கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் காலமானார்.

‘இதனால், ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் இருவரும் மீண்டும் அநாதரவாகியுள்ளனர். இந்த நிலையிலேயே ‘சமூக அக்கறை கொண்ட அந்தத் தாயாரின் ஆத்மா சாந்தியுற வேண்டுமாக இருந்தால் ஒட்டுமொத்த உறவுகளையும் இழந்து அவலம் சுமந்து வாழ்கின்ற பள்ளிப்பிஞ்சுகளின் தந்தையான, அரசியல் கைதி ஆனந்தசுதாகர் விடுதலை பெற்று வீடு திரும்பி, அந்தக் குழந்தைகளை அரவணைத்து பாதுகாப்பதற்கு தமிழ்ச் சமூகமாக நாம்
வழிசமைக்க வேண்டும்’, என்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராடும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...

பேரிடர்; இலங்கையில் பேரழிவு!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் முல்லைத்தீவு, மன்னார் நகர...