Home தென்னிலங்கைச் செய்திகள் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ய ஏற்பாடு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ய ஏற்பாடு!

Share
Share

2015 ஆம் ஆண்டு மைத்திரி-ரணில் அரசாங்கத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அர்ஜூன் மகேந்திரன், பிணை முறி மோசடி குற்றச்சாட்டில்விரைவில் கைது செய்து இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள மகேந்திரன், முறைப்படி கைது செய்யப்பட்டு சட்ட
நடவக்கை எடுப்பதற்கு உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சென்ற ஒகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தாக்கல் செய்த முறைப்பாட்டில், செப்ரெம்பர் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

ஆனாலும் அர்ஜூன் மகேந்திரன் இதுவரை முன்னிலையாகவில்லை. இதனால் அவரை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச பிடியாணையின் பிரகாரம் அவரை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...

ரணில் விவகாரம்; பிரித்தானியாவில் விசாரணை மேற்கொண்ட குழு நாடு திரும்புகிறது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில்கலந்துகொள்வதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது,...