Home தென்னிலங்கைச் செய்திகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவைஉடன் கைது செய்து விசாரிக்குக – தயாசிறி எம்.பி.!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவைஉடன் கைது செய்து விசாரிக்குக – தயாசிறி எம்.பி.!

Share
Share

“கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் சுங்கத் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் சீவலி அருட்கொட ஆகியோரைக் கைது செய்து முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தினார் ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பரிசோதனைகளின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் குறிப்பிட்ட விடயங்களுக்காக நானும், உதய கம்மன்பிலவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்துள்ளோம்.

இந்தக் கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அந்த அறிக்கையில் சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை முறையற்ற செயற்பாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறாயின் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் சுங்கத் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் சீவலி அருட்கொட ஆகியோரைக் கைது செய்து முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

குற்றச் செயலுடன் தொடர்புடையவர்களை விசாரிக்காமல், குற்றத்தை வெளிக்கொண்டு வந்தவர்களை விசாரிப்பது சட்டத்துக்கு முரணானது என்பதைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விளங்கிக்கொள்ள வேண்டும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

எனது தந்தை நிச்சயம் வருவார்! வரலாறு அவரை விடுவிக்கும்! – ராஜிதவின் மகன் தெரிவிப்பு! 

“எனது தந்தை நிச்சயம் வருவார். வரலாறு அவரை விடுதலை செய்யும்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சர்...

எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க முன் உங்கள் அப்பா எங்கே எனச் சொல்லுங்கள் – ராஜிதவின் மகனுக்கு அமைச்சர் சமந்த பதில்!

“எங்கள் ஆட்சியைக் கவிழ்ப்பது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் உங்கள் தந்தை எங்கிருக்கின்றார் எனச் சொல்லுங்கள்....

கொலைக் குற்றவாளிகள் தப்ப முடியாது – அவர்களுக்குத் தண்டனை உறுதி என்கிறார் அமைச்சர் பிமல்!

“கொலைக் குற்றவாளிகளைப் பாதுகாக்கவே ரணில் – ராஜபக்ஷ தரப்பு  ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட...

இளம் யுவதி வெட்டிக்கொலை – தென்னிலங்கையில் கொடூரம்!

இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் அம்பாந்தோட்டை, கட்டுவனை பிரதேசத்தில்...