Home தென்னிலங்கைச் செய்திகள் அதிவேக நெடுஞ்சாலையில் 190 பில்லியன் ரூபாய் சேதம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலையில் 190 பில்லியன் ரூபாய் சேதம்!

Share
Share

நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலையால், அதிவேக நெடுஞ்சாலையில் மாத்திரம் சுமார் 190 பில்லியன் ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி (Wimal Kandambi) இதனைத் தெரிவித்துள்ளார்.

வெள்ளம், மண்சரிவு மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பேரழிவுகளால் அதிவேக நெடுஞ்சாலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை மின்சார சபையும் தொடர்புடைய சேதங்களை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் நீர்ப்பாசன முறையும் பாரிய சேதங்களை சந்தித்துள்ளதாகவும் அவை தற்போது படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருவதாகவும் நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், துறைகள் வாரியாக சேதம் மற்றும் மீள்கட்டமைப்புக்கான நிதித் தேவைகள் குறித்த விரிவான மதிப்பீட்டைத் தயாரிக்க அரசாங்கம் உலக வங்கியுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் – IMF பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் எனத் தெரிவித்துள்ள...