அணுசக்தி விபத்தின்போது நாட்டுக்கு ஏற்படும் கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முற்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை நிறுவ அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.
அணுசக்தி முகவர் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் நெடுந்தீவு, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, கற்பிட்டி ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கட்டமைப்புகள் நிறுவப்படவுள்ளன என்று இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் ஆய்வு மற்றும் அமுலாக்க பிரிவின் பணிப்பாளர் பிரகீத் கடதுன்ன தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள கடற்படை முகாம்களை கேந்திரமாக கொண்டு இந்த 5 இடங்களில் இந்த அமைப்புகள் நிறுவப்படவுள்ளன. இந்த கட்டமைப்பின் ஊடாக நாட்டுக்கு அருகிலுள்ள நாடுகளில் உள்ள அணுசக்தி நிலையங்களில் ஏற்படும் இயற்கையான அல்லது செயற்கை விபத்துகளின்போது நாட்டுக்குள் வரும் கதிர்வீச்சை அவதானிக்க முடியும் – என்றும் தெரிவிக்கப்பட்டது
Leave a comment