Home தாயகச் செய்திகள் அணுசக்தி கதிர்வீச்சு கண்காணிப்பு மையங்களை வடக்கு – கிழக்கில் நிறுவ நடவடிக்கை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

அணுசக்தி கதிர்வீச்சு கண்காணிப்பு மையங்களை வடக்கு – கிழக்கில் நிறுவ நடவடிக்கை!

Share
Share

அணுசக்தி விபத்தின்போது நாட்டுக்கு ஏற்படும் கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய  முற்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை நிறுவ அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

அணுசக்தி முகவர் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் நெடுந்தீவு, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, கற்பிட்டி ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கட்டமைப்புகள் நிறுவப்படவுள்ளன என்று  இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் ஆய்வு மற்றும் அமுலாக்க பிரிவின் பணிப்பாளர் பிரகீத் கடதுன்ன தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள கடற்படை முகாம்களை கேந்திரமாக கொண்டு இந்த 5 இடங்களில் இந்த அமைப்புகள் நிறுவப்படவுள்ளன. இந்த கட்டமைப்பின் ஊடாக நாட்டுக்கு அருகிலுள்ள நாடுகளில் உள்ள அணுசக்தி நிலையங்களில் ஏற்படும் இயற்கையான அல்லது செயற்கை விபத்துகளின்போது நாட்டுக்குள் வரும் கதிர்வீச்சை அவதானிக்க முடியும் – என்றும் தெரிவிக்கப்பட்டது

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வாகன விபத்துக்களால் இந்த ஆண்டில் 1778 பேர் மரணம்!

கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இன்று வரை, மரணங்களை ஏற்படுத்திய 1,682 வாகன விபத்துகள்...

தமிழ்த் தேசியப் பிரச்சினையை முறையாகக் கையாளும் திருப்புமுனைத் தீர்மானம் ஜெனிவாவில் மிக அவசியம் – உறுப்பு நாடுகளுக்கு தமிழரசுக் கட்சி கடிதம்!

ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் வரவிருக்கும் அறுபதாவது கூட்டத் தொடர் அமர்வில் இலங்கை தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட...

கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம் – நீதிமன்றில் சி.ஐ.டி. தெரிவிப்பு!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  அதிகாரிகள்...

யாழ். வரும் ஜனாதிபதி செம்மணிப் புதைகுழியை நேரில் பார்வையிடலாம் – அமைச்சர் சந்திரசேகர் தகவல்!

வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, செம்மணி...