மாகாண சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு
உத்தேசிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தரப்பு தெரிவித்
துள்ளது. எதிர்வரும் 3 அல்லது 4 வருடங்களுக்குத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பில்லை என, தேர்தல்கள் ஆணையாளர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தாக கூறி, ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே, ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல், உள்ளூராட்சி சபைகள் தேர்தல் நடத்தப்பட்டுள்ள நிலையில், மாகாண சபைகள் தேர்தலும் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தநிலையில், சமன் சிறி ரத்நாயக்கவின் கருத்து அரசியல் தரப்பில் கேள்விகளை
எழுப்பியிருக்கிறது இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டு வினவியபோது- இதற்குப் பதிலளித்த அவர், தேர்தல்கள் ஆணைக்குழு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்குத் தயாராகவே இருப்பதாகக் குறிப்பிட்டார்.
எனினும், சட்டச் சிக்கல்கள் தடையாக உள்ள நிலையில் அதனை பாராளுமன்றத்தினூடாக நிவர்த்திப்பதாக அரசாங்கமும் உறுதியளித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறித்த கருத்தை வெளியிட்டிருப்பார் என, தாம் நம்பவில்லை என அந்த உயரதிகாரி குறிப்பிட்டார்.
த்துடன், ஆணைக்குழுவின் தலைவரைத் இது தொடர்பில் நேற்றுக் காலை தொடர்பு கொண்டு கேட்ட போது, தாம் தேர்தல்கள் நடத்தப்படாது என்ற கருத்தை வெளியிடவில்லை என்றும், தவறாகப் பகிரப்படும் இந்த செய்திக்கான மறுப்பைத் தாம் ஊடகங்களுக்கு வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக குறித்த உயரதிகாரிகூறினார்.
தேர்தல்கள் ஆணைக்குழு என்ற வகையில் தாம் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தத்தைத் தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Leave a comment