Home தென்னிலங்கைச் செய்திகள் அடுத்த வருடம் மாகாணசபைத் தேர்தல்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

அடுத்த வருடம் மாகாணசபைத் தேர்தல்!

Share
Share

மாகாண சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு
உத்தேசிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தரப்பு தெரிவித்
துள்ளது. எதிர்வரும் 3 அல்லது 4 வருடங்களுக்குத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பில்லை என, தேர்தல்கள் ஆணையாளர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தாக கூறி, ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே, ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல், உள்ளூராட்சி சபைகள் தேர்தல் நடத்தப்பட்டுள்ள நிலையில், மாகாண சபைகள் தேர்தலும் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தநிலையில், சமன் சிறி ரத்நாயக்கவின் கருத்து அரசியல் தரப்பில் கேள்விகளை
எழுப்பியிருக்கிறது இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டு வினவியபோது- இதற்குப் பதிலளித்த அவர், தேர்தல்கள் ஆணைக்குழு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்குத் தயாராகவே இருப்பதாகக் குறிப்பிட்டார்.

எனினும், சட்டச் சிக்கல்கள் தடையாக உள்ள நிலையில் அதனை பாராளுமன்றத்தினூடாக நிவர்த்திப்பதாக அரசாங்கமும் உறுதியளித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறித்த கருத்தை வெளியிட்டிருப்பார் என, தாம் நம்பவில்லை என அந்த உயரதிகாரி குறிப்பிட்டார்.

த்துடன், ஆணைக்குழுவின் தலைவரைத் இது தொடர்பில் நேற்றுக் காலை தொடர்பு கொண்டு கேட்ட போது, தாம் தேர்தல்கள் நடத்தப்படாது என்ற கருத்தை வெளியிடவில்லை என்றும், தவறாகப் பகிரப்படும் இந்த செய்திக்கான மறுப்பைத் தாம் ஊடகங்களுக்கு வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக குறித்த உயரதிகாரிகூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழு என்ற வகையில் தாம் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தத்தைத் தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்கும் ரோம் சட்டத்தில் இலங்கை ஒப்பமிட வேண்டும் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசுக்குப் பரிந்துரை!

“சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஸ்தாபிக்கும் சர்வதேச பிரகடனத்தை ‘ரோம் சட்டம்’ என்பர். அந்தச் சட்டத்தை அங்கீகரித்து...

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி கொழும்பில் துப்பாக்கியுடன் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் நேற்று கொழும்பில்...

ஓகஸ்ட் 10 ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஓகஸ்ட் 10...

வீட்டாரை மிரட்ட முயன்று நயினாதீவில் ஒருவர் பரிதாப மரணம்!

மதுபோதையில் வீட்டாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு, தனது உடலில் பெற்றோலைஊற்றி தீ வைக்க போவதாக மிரட்டியபோது அந்நபரின்...