Home தென்னிலங்கைச் செய்திகள் அடுத்த தேர்தலுடன் சஜித்தின் கட்சி ‘அவுட்’! – சரத் பொன்சேகா!
தென்னிலங்கைச் செய்திகள்

அடுத்த தேர்தலுடன் சஜித்தின் கட்சி ‘அவுட்’! – சரத் பொன்சேகா!

Share
Share

அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பத்து இலட்சம் வாக்குகளை மட்டுமே பெறும் என்றும், இது முன்னைய தேர்தல்களில் பெற்ற வாக்குகளை விட மிகக் குறைவாக இருக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்த அவர், மேலும் குறிப்பிடுகையில்,

“ஐக்கிய மக்கள் சக்தியின் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஏற்கனவே கட்சியை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

இது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தியைக் குறிக்கின்றது.

முதலில் குமார வெல்கம வெளியேறினார். பின்னர் சம்பிக்க, ராஜித, தலதா மற்றும் பொன்சேகா ஆகியோர் வெளியேறினர்.

மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில், கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் ஒவ்வொரு முடிவையும் ஏற்றுக்கொண்டு, ஆமாம் போடுபவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

இந்தநிலையில், அத்தகையவர்களுடன் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பயணத்தை முன்னெடுப்பது கடினமான காரியம்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வைத்தியர் மகேஷி பிணையில் விடுவிப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவை...

காணி விடுவிப்பை வலியுறுத்தி வடக்கு மக்கள் கொழும்பில் போராட்டம்!

வடக்கில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் கொழும்பில் இன்று ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் கவனவீர்ப்புப் போராட்டத்தில்...

மீரிகமவில் ஒருவர் சுட்டுக்கொலை!

மீரிகமவில் அனுமதியின்றி காணி ஒன்றினுள் தூரியன் பழம் பறிக்கச் சென்ற ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்....

தேசத்தின் குரலுக்கு பாரிஸில் சிலை!

தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்துக்கு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நினைவு சிலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான...