யாழ்ப்பாணம், அச்சுவேலி – அக்கரை கடற்கரையில் இளைஞன்
ஒருவரின் சடலம் நேற்று கரையொதுங்கியது.
வடமராட்சி – கரணவாயை சேர்ந்த இளைஞரின் சடலமே நேற்று வியாழக்கிழமை மாலை
இவ்வாறு கரையொதுங்கியது.
மீட்கப்பட்ட சடலம் அச்சுவேலி பிரதேச மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக யாழ்.போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Leave a comment