Home தாயகச் செய்திகள் ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

Share
Share

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் – கரடிப்புலவு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த நாகையா நாகையா நாகராஜா (வயது 41) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் நடத்தப்பட்ட உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கையில், தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் ஏற்பட்ட அதிக இரதப் போக்கால் மரணம் சம்பவித்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறித்த நபர் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...