Home தாயகச் செய்திகள் யாழில் புதிய உள்ளக விளையாட்டரங்கு; அமைச்சரவை ஒப்புதல்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

யாழில் புதிய உள்ளக விளையாட்டரங்கு; அமைச்சரவை ஒப்புதல்!

Share
Share

வடக்கு மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்கும், அத்தியாவசிய விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளித்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் உள்ளக விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்வதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேசைப் பந்து, ரென்னிஸ், பூப்பந்து, வலைப்பந்து,
மற்றும் சதுரங்கம் போன்ற உள்ளக விளையாட்டுகளுக்குத் தேவையான வசதிகள் இந்த விளையாட்டரங்கில் ஏற்படுத்தப்படவுள்ளன.

இதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த நவீன உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு 170 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...

பேரிடர்; இலங்கையில் பேரழிவு!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் முல்லைத்தீவு, மன்னார் நகர...