Home தென்னிலங்கைச் செய்திகள் 103 கோடி ரூபா நிதி; பஸிலுக்கு எதிராக முறைப்பாடு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

103 கோடி ரூபா நிதி; பஸிலுக்கு எதிராக முறைப்பாடு!

Share
Share

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தினார் என்று கூறப்படும் குற்றச் சாட்டுகள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பஸில் ராஜபக்ஷ 2010 முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 103 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

இலஞ்சம், ஊழல் மற்றும் விரயத்துக்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பின் தலைவர் காமந்த துஷார இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த முறைப்பாடுக்கு அமையவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரச வளங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டன என்று கூறப்படும் விவரங்கள், முன்னாள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...