Home தாயகச் செய்திகள் வடக்கு மாகாண சபை; வரதாஜப் பெருமாள் தலைமையில் யாழில் கூட்டம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வடக்கு மாகாண சபை; வரதாஜப் பெருமாள் தலைமையில் யாழில் கூட்டம்!

Share
Share

வடக்கு மாகாண சபையை இம்முறை தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக கைப்பற்றுவது குறித்து கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் நேற்று கூடி விரிவாக ஆராய்ந்துள்ளனர்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ்க்கட்சிகள் ஒற்றுமையாக போட்டியிட்டு எவ்வாறு வடக்கு மாகாணத்தை கைப்பற்றுவது என்பது தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

வடக்கு-கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தலைமையில் தமிழ்க் கட்சிகளின் கூட்டம் மாலை 3.00 மணியளவில் இடம்
பெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,
புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார், ஜனநாயகப்
போராளிகள் கட்சியின் சி.வேந்தன் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த வருடம் அளவில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக
அரசாங்கம் கூறியுள்ள நிலையில், அது தொடர்பில் கட்சிகளின் நிலைப்பாடு
எவ்வாறு காணப்படுகின்றது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி என்பன தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தலைமையில் இந்தக் கூட்டம் இரண்டு மணித்தியாலம் இடம் பெற்றது.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரனுக்கும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளஅழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அதன் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் சுகயீனம் காரணமாக கலந்து கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஆவணம் தயாரிக்க இணக்கம்!

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த்...

எங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசியமில்லை – தேசிய மக்கள் சக்திக்க சி.வி.கே அறிவுரை!

சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில் – கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி...

திருமலை விவகாரம்; பிக்குவின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலை மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பிலான...

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...