Home தென்னிலங்கைச் செய்திகள் கனடாவில் வேலை வாய்ப்பு; மோசடிக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

கனடாவில் வேலை வாய்ப்பு; மோசடிக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

Share
Share

கனடாவில் வேலை பெற்று தருவதாகக் கூறி 1.49 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவர் நேற்று (9) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் பணியகத்தில் கைது செய்யப்பட்டார்.

சிங்ஹாரகே ஜனக சில்வா என்ற நபரே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர் நிரந்தர வதிவிடத்திற்காக கனடாவில் குடியுரிமை பெற்றவர்.

குறித்த சந்தேக நபர் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பலரிடமிருந்து மோசடியாக பணம் பெற்றுள்ள நிலையில் மோசடியால் பாதிக்கப்பட்ட பத்து பேர் பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

அதன்படிஇ பணியகம் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேக நபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்இ சந்தேகநபர் நேற்று பணியகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர்இ அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பிற்காக பணம் மோசடி செய்தல் மற்றும் மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (10) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...