Home தென்னிலங்கைச் செய்திகள் போதைப்பொருள் பாவனை; கடந்த ஒரு மாதத்தில் மூவாயிரம் பேர் கைது!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

போதைப்பொருள் பாவனை; கடந்த ஒரு மாதத்தில் மூவாயிரம் பேர் கைது!

Share
Share

இலங்கையில் கடந்த மாதம் (ஆகஸ்ட்) 29 ஆம் திகதி முதல் இந்த மாதம் (செப்டெம்பர்) 4 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 3 ஆயிரத்து 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்தச்  சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் 1011 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 972 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன்  28 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 913 பேரும், கஞ்சா செடிகளுடன் 29 பேரும், போதை மாத்திரைகளுடன் 59 பேரும், சட்டவிரோத சிகரட்டுகளுடன் 15 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஒரு கிலோ 907 கிராம் 606 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், ஒரு கிலோ 856 கிராம் 529 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், ஒரு கிலோ 342 கிராம் 62 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருளும், ஆயிரத்து 59 கிலோ 899 கிராம் 634 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 48 ஆயிரத்து 925 கஞ்சா செடிகளும், 6 ஆயிரத்து 733 போதை மாத்திரைகளும், 4 ஆயிரத்து 53 சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பெரும்பாலான கைதுகள் அரசியல் கண்காட்சிகள் என்கிறது ஐ.தே.க!

நாட்டில் நடைபெறும் கைதுகளில் பெரும்பான்மையானவை அரசியல் கண்காட்சிக்காகவே நடக்கின்றன. கைதாகும் 100 பேரில் 98 பேர்...

இந்த ஆண்டில் 62 ஆயிரம் பேரை அரச சேவையில் இணைக்க நடவடிக்கை – ஜனாதிபதி!

இந்த ஆண்டு புதிதாக 62 ஆயிரம் பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது...

மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று தொடக்கம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை முற்பகல்...

வங்கிகள் மூலம் மோசடி; மக்களுக்கு எச்சரிக்கை!

வங்கிகள் மூலம் பரிசுகள் வழங்கப்படுவதாக, தற்போது சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பகிரப்பட்டு வருவதாக...