Home தென்னிலங்கைச் செய்திகள் நுவரெலியாவில் போதைப்பொருள் தொழிற்சாலை!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நுவரெலியாவில் போதைப்பொருள் தொழிற்சாலை!

Share
Share

பாதாள உலகக் குழுவின் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவினால் நுவரெலியாவில் நடத்தப்பட்ட போதைப்பொருள் தொழிற்சாலையை செயற்படுத்துவதில், இரண்டு பாகிஸ்தான் நாட்டவர்கள் ஈடுபட்டிருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 

அதற்கமைய, குறித்த போதைப் பொருள் தொழிற்சாலையை செயற்படுத்துவதற்காக வெளிநாட்டவர்களை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவினர் நாட்டிற்கு வரவழைத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். 

கெஹெல்பத்தர பத்மேவினால் முதலீடு செய்யப்பட்டதாக கூறப்படும் குறித்த போதைப்பொருள் தொழிற்சாலை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

அதற்கமைய, குறித்த போதைப் பொருள் தொழிற்சாலைக்கு 40 இலட்சம் ரூபாய் பணத்தை முதலிட்டுள்ளமையை கெஹெல்பத்தர பத்மே ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

நுவரெலியாவில் உள்ள வீடொன்றை வாடகைக்கு பெற்றுக் கொண்டுள்ளதுடன், இரண்டாயிரம் கிலோகிராமிற்கும் அதிக இரசாயனங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இரட்டைக் கொலை துப்பாக்கிச்சூடு: மூன்று சந்தேகநபர்கள் சிக்கினார்கள்!

இரட்டைக் கொலை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை புதிய அரசமைப்பு மூலம் நிச்சயம் நீக்கப்படும் – நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும். புதிய அரசமைப்பில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்ட...

ஏறாவூரில் கைக்குண்டுகள் மீட்பு! (படங்கள்)

மட்டக்களப்பு ஓட்டுபள்ளிவாசல் பின்பகுதியல் உள்ள பழைய பாடசாலை காணியில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை தேடி இன்று செவ்வாய்க்கிழமை...

போதைப்பொருள் கொள்கலன்கள் விவகாரம்; அரசாங்கம் மீது நாமல் குற்றச்சாட்டு!

போதைப்பொருள் கொள்கலன்கள் தொடர்பான உண்மைகளை மூடிமறைப்பதற்கு, பொதுஜன பெரமுன உள்ளிட்ட தரப்புகள் மீது அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை...