Home தென்னிலங்கைச் செய்திகள் ஒட்டுசுட்டான் கொலை; இராணுவச் சிப்பாய் மற்றொருவரும் கைது!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஒட்டுசுட்டான் கொலை; இராணுவச் சிப்பாய் மற்றொருவரும் கைது!

Share
Share

முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றோர் இராணுவ சிப்பாயும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் கைதான சிப்பாய்கள் நால்வரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றது.

இதன்போது, சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட இராணுவத்தினர் மூவருடன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட சிப்பாயும் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கில் முன்னிலையான சட்டத்தரணிகள் எம்.ஏ.சுமந்திரன், கெங்காதரன், தனஞ்சயன் உள்ளிட்டவர்கள் கைதான இராணுவத்தினருக்கு பிணை வழங்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.

இந்த நிலையில் சிப்பாய்கள் நால்வரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டு – ஜீவநகர் கிராமத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம் அகற்றப்பட்டு வரும் நிலையில் கடந்த 7ஆம் திகதி இரவு இராணுவத்தினர் அழைத்து இளைஞர்கள் ஐவர், அங்கு சென்றனர்.

இவ்வாறு சென்றவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில், மூவர் குளத்தில் குதித்து தப்பி வந்தனர்.

ஒருவர் இராணுவத்தினரின் தாக்குதலில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்த நிலையில், காணாமல் போன இளைஞர் மறுநாள் காலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அரசியல் நோக்கங்கள் எமக்கு முக்கியமல்ல – பிரதமர் ஹரினி!

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு...

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...