Home தாயகச் செய்திகள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவதை எதிர்த்து மனுத் தாக்கல்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவதை எதிர்த்து மனுத் தாக்கல்!

Share
Share

கடந்த 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின்
சிறப்புரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி நேற்று
உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேராவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனுபவித்து வரும்
சிறப்புச் சலுகைகளை இரத்து செய்வதற்காக, 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் எண் ஜனாதிபதி
உரிமைச் சட்டத்தை இரத்து செய்வதற்கான தொடர்புடைய சட்டமூலம் அண்மையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் இரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட மூலத்தின்படி, முன்னாள் ஜனாதிபதி அல்லது மனைவிக்கு வழங்கப்படும் எந்தவொரு வீடு, மாதாந்த கொடுப்பனவும், மாதாந்த செயலக கொடுப்பனவு, போக்குவரத்து, பிற வசதிகள் மற்றும் மாதாந்த ஓய்வூதியமும் இரத்து செய்யப்படவுள்ளன.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யும் வகையில், ஜனாதிபதியின் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி நேற்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஆவணம் தயாரிக்க இணக்கம்!

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த்...