Home தாயகச் செய்திகள் யானை தாக்கி முல்லைத்தீவில் ஒருவர் படுகாயம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யானை தாக்கி முல்லைத்தீவில் ஒருவர் படுகாயம்!

Share
Share

யானையின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு – ஒட்டுசுட்
டான் – கருவேலன்கண்டல் மானுருவி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்தச்
சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் சுந்தரம் சிவதாஸ் (வயது 51) என்பவரே படுகாயமடைந்தார்.
சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தவரை யானை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

அவர், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, இந்தப் பகுதியில் அடிக்கடி யானை தொல்லை இருப்பதாகவும்
மின்வேலி அமைத்துத் தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...