Home தாயகச் செய்திகள் மூதூரில் டிப்பர் – கார் மோதி விபத்து! விவசாய போதனாசிரியர் பரிதாப மரணம்!- இளைஞர் ஒருவர் படுகாயம்
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மூதூரில் டிப்பர் – கார் மோதி விபத்து! விவசாய போதனாசிரியர் பரிதாப மரணம்!- இளைஞர் ஒருவர் படுகாயம்

Share
Share

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் இன்று காலை  கார் – ரிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.  

அதேவேளை, காரில் பயணித்த மற்றுமொருவர் படுகாயம் அடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் காரில் பயணித்த தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாய போதனாசிரியரான ஹினாயத்துல்லாஹ் ஜெம்சித் (வயது 33) என்பவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர் தோப்பூரைச் சேர்ந்த முஸ்தகீம் சியான் (வயது 25) எனத் தெரியவருகின்றது. ரிப்பர் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

காரில் பயணித்தவர்கள் தோப்பூரில் இருந்து மன்னாருக்கு வேலை நிமித்தமாகச் சென்று கொண்டிருந்தபோது எதிர்த்திசையில் வந்த ரிப்பர் வாகனத்துடன் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...