Home தென்னிலங்கைச் செய்திகள் மாகாண சபைத் தேர்தலில் இ.தொ.கா.தனிவழி செல்வதே நல்லது என்கிறார் ஜீவன்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மாகாண சபைத் தேர்தலில் இ.தொ.கா.தனிவழி செல்வதே நல்லது என்கிறார் ஜீவன்!

Share
Share

“மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அதில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். எனினும், கட்சியே இறுதி முடிவை எடுக்கும்.” – இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொழும்பு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்வில் கலந்துகொண்ட ஜீவன் தொண்டமான் எம்.பியிடம் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்புகளுடனும் பேச்சு நடத்தினோம். எனினும், எதிர்க்கட்சியிடம் ஒற்றுமை இல்லை. ஒற்றுமை இல்லாத அமைப்பை நம்பி இருந்தால் வேலை செய்வதற்குரிய வாய்ப்பு இல்லாமல் போகும்.

உள்ளூராட்சி சபை என்பது நிர்வாக சம்பந்தப்பட்ட விடயம். அந்த நிர்வாகம் முறையாக நடந்தால்தான் மக்களுக்குரிய சேவை முறையாகச் சென்றடையும்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சியே இறுதி முடிவை எடுக்கும். எனினும், நாம் தனித்துப் போட்டியிட்டால் அது நமக்குப் பயனாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

ஆளும் கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எதிர்க்கட்சி மீதும் நம்பிக்கை இல்லை. எனவே, நாம் எமது வழியில் பயணிப்பது சிறந்தது. எனினும், கட்சியே இறுதி முடிவை எடுக்கும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

செம்மணிப் புதைகுழி குறித்த விசாரணைக்கு அரசு எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

“யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளுக்கு அரசு எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை. மாறாக தேவையான...

தேசபந்துவைப் பதவி நீக்குகின்றகடிதத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்!

தேசபந்து தென்னக்கோனைப் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் கடிதத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஒப்புதல்...

மின்சாரம் திருத்தச் சட்டமூலம் சபையில்96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இன்று...

சஷீந்திர ராஜபக்ஷ கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார். நுகேகொடையிலுள்ள அவரது வீட்டில் வைத்து கையூட்டல் மற்றும் ஊழல்...