Home தென்னிலங்கைச் செய்திகள் மனிதப் புதைகுழிப் பகுதிகளில் இன்று ஸ்கான் பரிசோதனை!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மனிதப் புதைகுழிப் பகுதிகளில் இன்று ஸ்கான் பரிசோதனை!

Share
Share

அரியாலையில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழி பகுதிகள் இன்று திங்கட்கிழமை
ஸ்கான் பரிசோதனை செய்யப்படவுள்ளன. அரியாலை – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட இரு மனிதப் புதைகுழிகளில் தற்போது அகழ்வு
பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் புதைகுழிகளில் இன்றுவரை 130 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

120 எலும்புக்கூடுகள் புதைகுழிகளிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,

இந்தப் புதைகுழிகளின் அருகே வேறு மனிதப் புதைகுழிகள் இருக்கின்றனவா என்று ஆராய ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே, இந்த இரு மனிதப் புதைகுழிகளிலும் இருந்து மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள் நாளை செவ்வாய்க்கிழமை காட்சிப்படுத்தப்படவுள்ளன.

மக்கள் அடையாளம் காணும் விதமாகவே இந்தச் சான்றுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சோமரத்னவுக்கு சிறைக்குள்ளே விசேட பாதுகாப்பு உடன் வழங்கப்பட வேண்டும் என்றும் மனோ வலியுறுத்து!

“செம்மணி படுகொலை வழக்கில் சர்வதேச கண்காணிப்பு, விசாரணைக்கு ஜனாதிபதி அநுர உடன்பட வேண்டும். அதிலே, லான்ஸ்...

மனிதப் புதைகுழிகள்: சர்வதேச விசாரணை நடந்தால் சாட்சியமளிப்பதற்கு நான் தயார் – சோமரத்ன ராஜபக்ஷ!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருக்கின்றேன் என்று...

முதலமைச்சருக்கு போட்டியிட விரும்புகிறேன் என்கிறார் சுமந்திரன்!

வடக்கு மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறேன் என்று இலங்கை தமிழ் அரசு...

தென்னிலங்கையில் இன்றும் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்!

தென்னிலங்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மாத்தறை, கபுகம பகுதியில்...