Home தென்னிலங்கைச் செய்திகள் மனிதப் புதைகுழிப் பகுதிகளில் இன்று ஸ்கான் பரிசோதனை!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மனிதப் புதைகுழிப் பகுதிகளில் இன்று ஸ்கான் பரிசோதனை!

Share
Share

அரியாலையில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழி பகுதிகள் இன்று திங்கட்கிழமை
ஸ்கான் பரிசோதனை செய்யப்படவுள்ளன. அரியாலை – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட இரு மனிதப் புதைகுழிகளில் தற்போது அகழ்வு
பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் புதைகுழிகளில் இன்றுவரை 130 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

120 எலும்புக்கூடுகள் புதைகுழிகளிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,

இந்தப் புதைகுழிகளின் அருகே வேறு மனிதப் புதைகுழிகள் இருக்கின்றனவா என்று ஆராய ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே, இந்த இரு மனிதப் புதைகுழிகளிலும் இருந்து மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள் நாளை செவ்வாய்க்கிழமை காட்சிப்படுத்தப்படவுள்ளன.

மக்கள் அடையாளம் காணும் விதமாகவே இந்தச் சான்றுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...