தவறுதலாக உடையில் தீ பற்றியதால் முதியவர் ஒருவர் நேற்றுமுன்தினம்
உயிரிழந்தார்.
பட்டினசபை வீதி, மானிப்பாய் பகுதியை சேர்ந்த மா. சின்னமணி (வயது95) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த முதியவர் கடந்த 26ஆம் திகதி அன்று சுருட்டு புகைப்பதற்கு பற்றவைத்த தீக்குச்சியை தவறுதலாக அவர் அணிந்திருந்த ஆடையில் போட்டுள்ளார். இதில் தீக்காயங்களுக்கு உள்ளான அவர் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுனதினம் உயிரிழந்தார்.
அவரது இறப்பு தொடர்பான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
Leave a comment