Home தாயகச் செய்திகள் தாவடியில் கொலை; சந்தேக நபர் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

தாவடியில் கொலை; சந்தேக நபர் கைது!

Share
Share

தாவடியில் நேற்று முன்தினம் இரவு ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காங்கேசன்துறை வீதியில் தாவடி மதுபான விற்பனை நிலையம் அருகே தர்க்கம் ஒன்றில் இருவர் ஈடு பட்டனர். இதன்போது, மதுபோதையில் இருந்தவர் மற்றவரை பலமுறை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நபர் யாழ். போதனா மருத்துவமனை யில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

மானிப்பாயைச் சேர்ந்த நே. சர்வேந்திரன் (வயது 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் சந்தேக நபரை மண்டைதீவு பகுதியில் வைத்து நேற்று கைது செய்தனர்.

அத்துடன், அவரிடம் விசாரணைகள் மேற் கொண்டு வருகின்றனர்

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...