Home தென்னிலங்கைச் செய்திகள் இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிக வலு மோட்டார் சைக்கிள்கள் சிக்கின!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிக வலு மோட்டார் சைக்கிள்கள் சிக்கின!

Share
Share

புத்தளம், தலவில மற்றும் நாவக்காடு பகுதிகளில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து  நடத்திய சோதனையின்போது இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்டன எனக் கூறப்படும் 5  உயர்வலு கொண்ட மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று  பொலிஸார் தெரிவித்தனர்.

தடை செய்யப்பட்ட 800 மற்றும் 400 எஞ்சின் திறன் கொண்ட நான்கு மோட்டார் சைக்கிள்களும், எந்தவொரு சட்ட ஆவணங்களும் இல்லாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த 250 எஞ்சின் திறன் கொண்ட ஒரு மோட்டார் சைக்கிளும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது 50, 45 மற்றும் 20, 22 வயதுடைய 4 சந்தேகநபர்களும்  கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோட்டார் சைக்கிள்கள் வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்றும், அவற்றில் சில மோட்டார் சைக்கிள்கள் இரவில் இரகசியமாக ஓட்டிச் செல்லப்பட்டன என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் புத்தளம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...

மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளர்களுக்கு பெரும் சிரமம்!

கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8...