Home தென்னிலங்கைச் செய்திகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலர் விரைவில் கைது!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலர் விரைவில் கைது!

Share
Share

குண்டுத்தாக்குதல் தொடர்பில் இதுவரை காலமும் வெளியாகாத பல விடயங்கள் தற்போதைய விசாரணைகளின் ஊடாக வெளிவந்துள்ளன. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பலர் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்கள். விசாரணைகளின் ஒரு பகுதியையே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அண்மையில் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் விவகாரம் மற்றும் ஏனைய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குண்டுத்தாக்குதல் தொடர்பில் இதுவரை காலமும் வெளியாகாத பல விடயங்கள் தற்போதைய விசாரணைகளின் ஊடாக வெளிவந்துள்ளன. அவற்றில் ஒரு பகுதியையே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அண்மையில் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட விடயத்தில் குறிப்பிடப்பட்ட பெயர் மற்றும் தொடர்புடைய நபர்கள் விசாரணைகளின் அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படுவார்கள். வெளிநாடுகளில் உள்ளவர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள்.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையவில்லை. பல விடயங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. குற்றத்தின் இராச்சியமாகவே இருந்தது.

விசாரணைகள் சிறந்த முறையில் இடம்பெறுவதால் தான் பல விடயங்கள் வெளியாகியுள்ளன. விசாரணைகள் நிறைவுபடுத்தப்பட்டு வெகுவிரைவில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கெஹெலியவின் குடும்பத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை!

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராகக்...

இந்த அரசாங்கத்துக்கு எதிராக அரச அதிகாரிகள்வெகுவிரைவில் வீதியில் இறங்குவார்கள் என்கிறார் நாமல்!

அரச அதிகாரிகள் இந்த அரசுக்கு எதிராக வெகுவிரைவில் வீதியில் இறங்கிப் போராடுவார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன...

என் திட்டத்தை மாற்றினால் மீண்டும் பொருளாதார நெருக்கடி – அநுர அரசுக்கு ரணில் எச்சரிக்கை!

“இலங்கையின் பொருளாதார மீட்சிக்காகச் சிறந்த திட்டத்தை அமுல்படுத்தினேன். அந்தத் திட்டத்தை அநுர அரசு முறையாகச் செயற்படுத்த...

யாழ்.மருத்துவபீடம் பேருந்து கொள்வனவுக்காக நடத்தும் இசை நிகழ்சிக்கு 30 சதவீத வரிவிலக்கு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்துக்கான பஸ் கொள்வனவுக்கு நடத்தப்படும் இசை நிகழ்ச்சிக்கு முழுமையான...