Home தென்னிலங்கைச் செய்திகள் பரீட்சைப் பெறுபேறுகளில் இறுதி இடத்தைப் பெற்றது வடக்கு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பரீட்சைப் பெறுபேறுகளில் இறுதி இடத்தைப் பெற்றது வடக்கு!

Share
Share

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் 69.86 வீத சித்தியைப் பெற்று இறுதி நிலையைப் பெற்றுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தநிலையில் 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 2 இலட்சத்து 37 ஆயிரத்து 26 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்தார்.

இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45 வீதமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், அனைத்து பாடங்களிலும் 9 ‘ஏ’ சித்திகளை பெற்ற 13 ஆயிரத்து 392 மாணவர்கள் உள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இது மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 4.15 வீதமாகும் என கூறியுள்ளார்.

அதனடிப்படையில் தெற்கு மாகாணத்தில் 75.64 வீதம் மேல் மாகாணத்தில் 74.47 வீதம்
கிழக்கு மாகாணத்தில் 74.26 வீதம் மத்திய மாகாணத்தில் 73.91 வீதம் சப்ரகமுவ மாகாணத்தில் 73.47 வீதம் ஊவா மாகாணத்தில் 73.14 வீதம் வடமேல் மாகாணத்தில் 71.47 வீதம் வட மத்திய மாகாணத்தில் 70.24 வீதம் வடக்கு மாகாணத்தில் 69.86 வீத மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

பாட வாரியாக பௌத்தம் 83.21 வீதம், சைவநெறி – 82.96 வீதம், கத்தோலிக்கம் 90.22 வீதம், கிறிஸ்தவம் 91.49 வீதம், இஸ்லாம் 85.45 வீதம், ஆங்கிலம் 73.82 வீதம், சிங்கள மொழி மற்றும் இலக்கியம் 87.73 வீதம், தமிழ் மொழி மற்றும் இலக்கியம் 87.03 வீதம்
வரலாறு 82.17 வீதம், அறிவியல் 71.06 வீதம், கணிதம் 69.07 வீதம் சித்தியடைந்துள்ளனர் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாத மாணவர்களின் சதவீதம் 2.34 வீதம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஆவணம் தயாரிக்க இணக்கம்!

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த்...

எங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசியமில்லை – தேசிய மக்கள் சக்திக்க சி.வி.கே அறிவுரை!

சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில் – கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி...