Home தென்னிலங்கைச் செய்திகள் பரீட்சைப் பெறுபேறுகளில் இறுதி இடத்தைப் பெற்றது வடக்கு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பரீட்சைப் பெறுபேறுகளில் இறுதி இடத்தைப் பெற்றது வடக்கு!

Share
Share

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் 69.86 வீத சித்தியைப் பெற்று இறுதி நிலையைப் பெற்றுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தநிலையில் 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 2 இலட்சத்து 37 ஆயிரத்து 26 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்தார்.

இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45 வீதமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், அனைத்து பாடங்களிலும் 9 ‘ஏ’ சித்திகளை பெற்ற 13 ஆயிரத்து 392 மாணவர்கள் உள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இது மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 4.15 வீதமாகும் என கூறியுள்ளார்.

அதனடிப்படையில் தெற்கு மாகாணத்தில் 75.64 வீதம் மேல் மாகாணத்தில் 74.47 வீதம்
கிழக்கு மாகாணத்தில் 74.26 வீதம் மத்திய மாகாணத்தில் 73.91 வீதம் சப்ரகமுவ மாகாணத்தில் 73.47 வீதம் ஊவா மாகாணத்தில் 73.14 வீதம் வடமேல் மாகாணத்தில் 71.47 வீதம் வட மத்திய மாகாணத்தில் 70.24 வீதம் வடக்கு மாகாணத்தில் 69.86 வீத மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

பாட வாரியாக பௌத்தம் 83.21 வீதம், சைவநெறி – 82.96 வீதம், கத்தோலிக்கம் 90.22 வீதம், கிறிஸ்தவம் 91.49 வீதம், இஸ்லாம் 85.45 வீதம், ஆங்கிலம் 73.82 வீதம், சிங்கள மொழி மற்றும் இலக்கியம் 87.73 வீதம், தமிழ் மொழி மற்றும் இலக்கியம் 87.03 வீதம்
வரலாறு 82.17 வீதம், அறிவியல் 71.06 வீதம், கணிதம் 69.07 வீதம் சித்தியடைந்துள்ளனர் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாத மாணவர்களின் சதவீதம் 2.34 வீதம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கை பயணமாகிறார்!

பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் திங்கட்கிழமை (21) இலங்கை மற்றும்...

இலங்கை உட்பட்ட நாடுகளிலிருந்து ஆடை இறக்குமதி வரி விலக்கு – பிரித்தானியா!

இலங்கை உட்பட வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து ஆடை உள்ளிட்ட பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்வதற்குப் பிரித்தானிய...

வவுனியாவில் போக்குவரத்துப் பொலிஸார் துரத்தியதால் நபர் ஒருவர் மரணம்! மக்கள் திரண்டதால் பதற்றம்!

வவுனியா மாவட்டம் கூமாங்குளம் பகுதியில் கடந்த இரவு போக்குவரத்து பொலிசார் துரத்திச்சென்று மோட்டார் சைக்கிள் சில்லுக்குள்...

நவம்பரில் உயர் தரப்பரீட்சை!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல்...