Home தாயகச் செய்திகள் ஆதிலட்சுமி சிவகுமார் எழுதிய “முட்காட்டுப் பூ” நாவல் கனடாவில் வெளியாகியது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஆதிலட்சுமி சிவகுமார் எழுதிய “முட்காட்டுப் பூ” நாவல் கனடாவில் வெளியாகியது!

Share
Share

படைப்பாளர் ஆதிலட்சுமி சிவகுமார் எழுதிய “ முட்காட்டுப் பூ” நாவல் வெளியீட்டு நிகழ்வு 07. 07. 2025 அன்று கனடாவில் நடைபெற்றது.

நிகழ்விற்கான ஆதரவினை கனேடியத் தமிழ்வானொலி மேற்கொண்டிருந்தது.

சுடரேற்றலை தொடர்ந்து கனேடிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்தை கரிசா துஷ்யந்தன், பவிசா துஸ்யந்தன் சகோதரிகள் இசைத்தனர். அடுத்து தலைமையுரை இடம்பெற்றது.

அறிமுக உரையை ஊடகவியலாளர்திருமதி சிவவதனி பிரபாகரன் நிகழ்த் , நாவலின் வெளியீட்டுரையை திருமதி.கலாநிதி குலமோகன் ஆசிரியை ஆற்றினார்.

மதிப்பீட்டுரையை ஊடகவியலாளர் திருமதி சக்தி சபாரட்ணம் நிகழ்த்தினார். ஆய்வுரைகளை தமிழ் ஆசிரியை திருமதி வனிதா இராஜேந்திரம், ஊடகவியலாளரும் ஆசிரியருமான கஜரூபன் குகதாசன் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.

முட்காட்டுப் பூவை நூலாசிரியர் வெளியிட்டு வைக்க முதற் சுவடியை செயற்பாட்டாளர் மயில்வாகனம் யோகேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.

சிறப்பு பிரதிகளை அனுசரணையாளர் விக்கி சீவரத்தினம் பெற்றுக்கொள்ள தொடர்ந்து கனடா தமிழ் கல்லூரி சார்பாக மனோகரி தயானந்தன், இளையோர் அமைப்பு சார்பாக யோகித்தா பிரதீபன், அயுசன் தவசீலனும், கனேடியத்தமிழ் வானொலி சார்பாக அழகனும் பெற்றுக்கொண்டனர்.

இலக்கிய ஆர்வலர்கள், நூலாசிரியரின் பால்யநண்பர்கள், ஊரவர்கள் உறவினரகள் நூலைப் பெற்றுக்கொண்டார்கள்.

நன்றியுரையையும் ஏற்புரையையும் நூலாசிரியர் வழங்கினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை உட்பட்ட நாடுகளிலிருந்து ஆடை இறக்குமதி வரி விலக்கு – பிரித்தானியா!

இலங்கை உட்பட வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து ஆடை உள்ளிட்ட பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்வதற்குப் பிரித்தானிய...

பரீட்சைப் பெறுபேறுகளில் இறுதி இடத்தைப் பெற்றது வடக்கு!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் 69.86...

வவுனியாவில் போக்குவரத்துப் பொலிஸார் துரத்தியதால் நபர் ஒருவர் மரணம்! மக்கள் திரண்டதால் பதற்றம்!

வவுனியா மாவட்டம் கூமாங்குளம் பகுதியில் கடந்த இரவு போக்குவரத்து பொலிசார் துரத்திச்சென்று மோட்டார் சைக்கிள் சில்லுக்குள்...

நவம்பரில் உயர் தரப்பரீட்சை!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல்...