Home தாயகச் செய்திகள் 2026 இல் மாகாணசபைத் தேர்தல் நடக்கும் – லால் காந்த!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

2026 இல் மாகாணசபைத் தேர்தல் நடக்கும் – லால் காந்த!

Share
Share

2026 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிமொழியை அமைச்சர் லால் காந்த மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

அதேவேளையில், பழைய முறையின் கீழ் அல்லது புதிய தேர்தல் முறைமை சட்டமாக்கப்பட்டு பின்னர், மாகாண சபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முன்னைய யோசனையை திருத்திய பின்னர் அரசாங்கம் பழைய முறையின் கீழ் தேர்தலை நடத்த முடியும் என்று லால் காந்த ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். 

தங்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உள்ளது. எனவே, பழைய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். 

தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி அரசாங்கத்திற்கு சவாலாக இருக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எதிர்க்கட்சி கூட்டணி ஒருபோதும் அரசாங்கத்திற்கு ஒரு பிரச்சினையாகவோ அல்லது சவாலாகவோ இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

காணிகளை ஒப்படைத்தனர் கோப்பாய் பொலிஸார்! யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம்!

கோப்பாய் பொலிஸார் நீதிமன்ற உத்தரவில் வெளியேற்றப்பட்டமையால்கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது....

வடக்கு மாகாண சபை; வரதாஜப் பெருமாள் தலைமையில் யாழில் கூட்டம்!

வடக்கு மாகாண சபையை இம்முறை தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக கைப்பற்றுவது குறித்து கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில்...

அதிக தொகை பணம்; சுன்னாகம் பொலிஸார் இருவருக்கு இடமாற்றம்!

சட்டவிரோதமான முறையில் பணத்தை ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை வடக்கு...

இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவிடம்!

நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி மற்றும் அவரது குழுவினர் செவ்வாய்க்கிழமை (15) கொழும்புக்கு...