Home தென்னிலங்கைச் செய்திகள் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை!

Share
Share

எதிர்காலத்தில், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பொதுநிர்வாக அமைச்சின் கீழ் ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருவதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40வது வருட நிறைவை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (27) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வெளிநாட்டில் வசிக்கும் அனைவருக்கும் வாக்களிக்க தேவையான வசதிகளை வழங்கவும், தேவையான சட்ட நிலைமைகளை உருவாக்கவும் பொது நிர்வாக அமைச்சு ஏற்கனவே விசேட குழுவை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாட்டில் வசிக்கும் அனைவருக்கும் பங்களிப்பு ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்த தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் இதன்போது வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கையில் அனர்த்தம்; ஐ.நா அவவசரகால ஒருங்கிணைப்புச் செயல்முறை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் அனர்த்தநிலைமைக்கு நிவாரணம் அளிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் தனது அவசரகால ஒருங்கிணைப்பு...

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...