Home தாயகச் செய்திகள் விடுதலைப்புலிகளை மீளுருவாக்க முயற்சி; கைதான 16 பேருக்கு விடுதலை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

விடுதலைப்புலிகளை மீளுருவாக்க முயற்சி; கைதான 16 பேருக்கு விடுதலை!

Share
Share

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர்கள் 16 பேரை கொழும்பு மேல் நீதிமன்றம்
நேற்று விடுதலை செய்தது.

2017 தொடக்கம் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்யும் நோக்கில் ஆயுதம், வெடிபொருட்களை சேகரித்தனர் என்று இவர்கள்மீது குற்றஞ்சாட்டி சட்ட மா அதிபர் குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார்.

எனினும், பிரதிவாதிகளின் தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்களை ஏற்ற கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன், 16 இளைஞர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

சட்ட மா அதிபரின் குற்றப்பத்திரம் நடைமுறையில் இருந்தாலும், நீதிமன்ற நியாயாதிக்க எல்லை என்ற அடிப்படையில், குறித்த 16 பேரும் யாழ்ப்பாண பிராந்தியத்தில் இடம்பெற்றவை என்று கூறப்படும் குற்றங்கள் தொடர்பிலேயே குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் வழக்கை விசாரிக்க முடியாது என்ற பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளின் வாதத்தை ஏற்ற நீதிபதி குறித்த 16 பேரையும் விடுதலை செய்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி யாழ். செம்மணியில் உறவுகள் போராட்டம்!

இனப்படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி வடக்கு – கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், செம்மணி...

கஜேந்திரகுமார் நினைப்பது போல் தமிழரசுக் கட்சி செயற்படாது! – சி.வி.கே.!

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் முடிந்து விடும் வேலையைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்...

புதிய அரசமைப்புக்கான வேலைத்திட்டம் ஆரம்பம் – நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு !

“புதிய அரசமைப்புக்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமது ஆட்சிக் காலத்துக்குள் புதிய அரசமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோம்.”...

நெடுந்தீவுக் கடலில் கைதான இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் ஓகஸ்ட் 06 வரை மறியல் நீடிப்பு!

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும்...