Home தாயகச் செய்திகள் விடுதலைப்புலிகளை மீளுருவாக்க முயற்சி; கைதான 16 பேருக்கு விடுதலை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

விடுதலைப்புலிகளை மீளுருவாக்க முயற்சி; கைதான 16 பேருக்கு விடுதலை!

Share
Share

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர்கள் 16 பேரை கொழும்பு மேல் நீதிமன்றம்
நேற்று விடுதலை செய்தது.

2017 தொடக்கம் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்யும் நோக்கில் ஆயுதம், வெடிபொருட்களை சேகரித்தனர் என்று இவர்கள்மீது குற்றஞ்சாட்டி சட்ட மா அதிபர் குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார்.

எனினும், பிரதிவாதிகளின் தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்களை ஏற்ற கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன், 16 இளைஞர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

சட்ட மா அதிபரின் குற்றப்பத்திரம் நடைமுறையில் இருந்தாலும், நீதிமன்ற நியாயாதிக்க எல்லை என்ற அடிப்படையில், குறித்த 16 பேரும் யாழ்ப்பாண பிராந்தியத்தில் இடம்பெற்றவை என்று கூறப்படும் குற்றங்கள் தொடர்பிலேயே குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் வழக்கை விசாரிக்க முடியாது என்ற பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளின் வாதத்தை ஏற்ற நீதிபதி குறித்த 16 பேரையும் விடுதலை செய்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...