Home தென்னிலங்கைச் செய்திகள் வாகன இறக்குமதி அடுத்த ஆண்டில் சாதாரண நிலைக்கு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வாகன இறக்குமதி அடுத்த ஆண்டில் சாதாரண நிலைக்கு!

Share
Share

இலங்கையில் வாகன இறக்குமதிகள், 2026 ஆம் ஆண்டில் சாதாரண நிலைக்குத் திரும்பும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் கேள்வியின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்குள், இலங்கையர்கள் வாகன இறக்குமதிக்கு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 

இது, ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒரு பில்லியன் டொலரை விட அதிகமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதனிடையில், வாகன இறக்குமதி வரிகளைக் கொண்டு இந்தமுறை, பாதீட்டு பற்றாக்குறையை நிவர்த்திக்க முடியும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கையில் அனர்த்தம்; ஐ.நா அவவசரகால ஒருங்கிணைப்புச் செயல்முறை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் அனர்த்தநிலைமைக்கு நிவாரணம் அளிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் தனது அவசரகால ஒருங்கிணைப்பு...

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...