Home தென்னிலங்கைச் செய்திகள் வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

Share
Share

வவுனியா மாநகர சபையின் சபை செயற்பாடுகளுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்து செவ்வாய்க்கிழமை (21) தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு ஆதரவு கோரப்பட்ட போது ஜனநாயக தேசிய முன்னணியின் போனஸ் ஆசனத்தினால் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதி மேயர் பதவி கோரி ஆதரவளித்திருந்தார்.

எனினும் அவர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட எல்லையில் வசித்த நிலையில் மாநகர சபையில் போட்டியிட்டமை அதனூடாக பதவியை பெற்றமை சட்ட விதிகளுக்கு மீறிய செயற்பாடு என மாநகர சபை உறுப்பினர்களான தேசிய மக்கள் சக்தியின் சார்பில் க. விஜயகுமாரும் சுயேற்சை குழு உறுப்பினரான பிரேமதாஸ் சிவசுப்பிரமணியமும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இதன் பிரகாரம் கடந்த நான்கு தவணைகளின் பின்னர் செவ்வாய்க்கிழமை (21) நீதிமன்றத்தினால் மேற்குறித்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்தவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

குற்றவாளிகளை கடல்மார்க்கமாக நாடுகடத்தும் முக்கிய நபர் கிளிநொச்சியில் சிக்கினார்!

இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை, சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் பிரதான ஆட்கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

யாழில் ஒரு வாரத்தில் 20 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையில்29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 14ஆம்...

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அக்கராயன் – ஈச்சங்குளத்தை சேர்ந்த கௌரிராஜன்...

யானை தாக்கி மட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் மரணம்!

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு பகுதியில் காட்டுயானை தாக்கியதில், நான்கு பிள்ளைகளின்...