Home தாயகச் செய்திகள் வவுனியா கூமாங்குளத்தில் பொலிஸாரால் ஒருவர் மரணம்! நீதி கோரிய மேலும் ஐவரை பிடித்தது பொலிஸ்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வவுனியா கூமாங்குளத்தில் பொலிஸாரால் ஒருவர் மரணம்! நீதி கோரிய மேலும் ஐவரை பிடித்தது பொலிஸ்!

Share
Share

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேலும்
5 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டர்
சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் வீதியில் விழுந்து மரணமடைந்திருந்தார்.

இதன்போது அப் பகுதியில் பயணித்த போக்குவரத்து பொலிஸாரே
குறித்த மரணத்துக்கு காரணம் என தெரிவித்த ஒரு குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டதுடன்,
பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர்.

மரணம் தொடர்பில் விசாரணை செய்ய சென்ற பொலிஸார் மீது அப் பகுதியில் குழுமி
இருந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 5 பொலிஸார் காயமடைந்ததுடன், பொலிஸாரின் இரு மோட்டர் சைக்கிள்கள் மற்றும் கப் ரக வாகனம் ஒன்றும் சேதமாக்கப்பட்டது.

இச் சம்பவத்தில் அரச சொத்துக்களைச் சேதப்படுத்தியமை, மக்களை ஒன்று கூட்டியமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறை ஏற்படுத்தியமை, இறப்புக்கு காரணமாக இருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் இருவர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து மேலும் 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களில் ராஜீவ் பங்கு; றீகனுக்கு கடிதம் அனுப்பினார்!?

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பங்கு குறித்து பாரதீய...

பாடசாலை இடை விலகலில் வடக்கில் ஆண்களே அதிகம் – ஆளுநர் கவலை!

வடக்கு மாகாண பாடசாலைகளில் இடை விலகலில் ஆண்களே அதிகமாகவுள்ளனர்என்று ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். தேசிய...

இளம் யுவதி வெட்டிக்கொலை – தென்னிலங்கையில் கொடூரம்!

இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் அம்பாந்தோட்டை, கட்டுவனை பிரதேசத்தில்...

வடக்கு மனிதப் புதைகுழிகள் பற்றி விரைவில் உண்மைகள் வெளிவரும் – அரசாங்கம் அறிவிப்பு!

வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் விரைவில் உண்மைகள் வெளிவரும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன...