Home தாயகச் செய்திகள் வடக்கில் நினைவேந்தல்களுக்கு அனுமதித்துவிட்டு இராணுவத்தினரை வேட்டையாடுகிறது அரசாங்கம் – நாமல் கவலை!
தாயகச் செய்திகள்தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வடக்கில் நினைவேந்தல்களுக்கு அனுமதித்துவிட்டு இராணுவத்தினரை வேட்டையாடுகிறது அரசாங்கம் – நாமல் கவலை!

Share
Share

வடக்கில் நினைவேந்தலுக்கு முழுமையாக அனுமதியளித்து விட்டு இராணுவத்தினரை வேட்டையாடும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவின் நிலைமை இராணுவ அதிகாரிகளுக்கும், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் எதிர்காலத்தில் ஏற்படலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டி அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இராணுவத்தினரை பாதுகாப்பதற்கு நிபந்தனையற்ற வகையில் நாங்கள் முன்னிலையாகும்.இந்த அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினரை பழிவாங்கும் வகையில் செயற்படுகிறது.புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருத்திப்படுத்துவதற்காக இராணுவத்தினர் வேட்டையாடப்படுகிறார்கள்.

இராணுவத்தினரை பாதுகாக்கும் எமது செயற்பாட்டுக்கு மகாநாயக்க தேரர்களின் ஒத்துழைப்பை முழுமையாக எதிர்பார்க்கிறோம். ஏனெனில் அரசாங்கத்தை நல்வழிப்படுத்தும் பொறுப்பு மகாநாயக்க தேரர்களுக்கு உண்டு.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்கவுக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் சி. பி. ரத்நாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் நேற்று கைது...

திருநெல்வேலிப் படுகொலை; சினிமாப்பாணியில் திட்டம்! கும்பல் சிக்கியது!

திருநெல்வேலியில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வாளால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் சிறைக்குள் திட்டம் தீட்டப்பட்டு தெல்லிப்பழையில்...

வவுனியாவில் 43 பேருக்கு எயிட்ஸ்!

வவுனியாவில் இதுவரை 43 பேர் எயிட்ஸ்நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளதுடன், இளவயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியாமாவட்ட பாலியல்நோய்...

இலங்கையில் அனர்த்தம்; ஐ.நா அவவசரகால ஒருங்கிணைப்புச் செயல்முறை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் அனர்த்தநிலைமைக்கு நிவாரணம் அளிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் தனது அவசரகால ஒருங்கிணைப்பு...