Home தாயகச் செய்திகள் வடக்கிற்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட வேண்டும் – சாணக்கியன்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

வடக்கிற்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட வேண்டும் – சாணக்கியன்!

Share
Share

வடக்கு மாகாணத்தில் காணப்படும் போக்குவரத்து சிக்கலை தீர்ப்பதற்கு
வடக்கிற்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட வேண்டும். இது
தொடர்பில் அரசாங்கம் விரைவில் கவனம் செலுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற அமர்வில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் அந்தப் பிரதேசங்கள் அபிவிருத்தியடையாமல் இருப்பதற்கு போக்குவரத்து நெரிசல் முக்கிய காரணமாகும்.

யாழ்ப்பாணத்திலிருந்து 08 மணித்தியாலம் பயணம் மேற்கொண்டு
கொழும்புக்குச் செல்ல வேண்டும்.

2013 ஆம் ஆண்டு 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையினுடைய அமைச்சரவை முன்மொழிவு இருந்தது.

மொனராகலை பிரதேசத்தின் ஊடாக மட்டக்களப்பிற்கு அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கும் தம்புள்ளை ஊடாக வடக்கை நோக்கி அதிவேக நெடுஞ்சாலை அமைக்கவும் முன்மொழியப்பட்டது.

இது தொடர்பாக அரசாங்கம் விரைவில் கவனம் செலுத்த வேண்டும் – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம் – தமிழக மீனவர்கள் நடவடிக்கை!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்...

வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...

சீனாவில் பிரதமர் ஹரிணி!

சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப்...

100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும்...