Home தாயகச் செய்திகள் வடக்கிற்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட வேண்டும் – சாணக்கியன்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

வடக்கிற்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட வேண்டும் – சாணக்கியன்!

Share
Share

வடக்கு மாகாணத்தில் காணப்படும் போக்குவரத்து சிக்கலை தீர்ப்பதற்கு
வடக்கிற்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட வேண்டும். இது
தொடர்பில் அரசாங்கம் விரைவில் கவனம் செலுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற அமர்வில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் அந்தப் பிரதேசங்கள் அபிவிருத்தியடையாமல் இருப்பதற்கு போக்குவரத்து நெரிசல் முக்கிய காரணமாகும்.

யாழ்ப்பாணத்திலிருந்து 08 மணித்தியாலம் பயணம் மேற்கொண்டு
கொழும்புக்குச் செல்ல வேண்டும்.

2013 ஆம் ஆண்டு 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையினுடைய அமைச்சரவை முன்மொழிவு இருந்தது.

மொனராகலை பிரதேசத்தின் ஊடாக மட்டக்களப்பிற்கு அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கும் தம்புள்ளை ஊடாக வடக்கை நோக்கி அதிவேக நெடுஞ்சாலை அமைக்கவும் முன்மொழியப்பட்டது.

இது தொடர்பாக அரசாங்கம் விரைவில் கவனம் செலுத்த வேண்டும் – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அரசியல் நோக்கங்கள் எமக்கு முக்கியமல்ல – பிரதமர் ஹரினி!

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு...

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...