Home தென்னிலங்கைச் செய்திகள் ராஜீவ் காந்தியை இந்திய உளவுத்துறை ஏமாற்றியது என்கிறார் மணி சங்கர் ஐயர்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ராஜீவ் காந்தியை இந்திய உளவுத்துறை ஏமாற்றியது என்கிறார் மணி சங்கர் ஐயர்!

Share
Share

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின், இலங்கை தொடர்பான கொள்கையின் சரிவுக்கு இந்திய இராணுவமே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான மணி சங்கர் ஐயர் இந்த குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.

ராஜிவ் காந்தியை பொறுத்தவரை, அவர், இந்தியாவின் மற்றும் இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்பதில் உறுதியாக இருந்தார்.

எனினும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின், இலங்கை தொடர்பான பின்னடைவுக்கு, இராணுவம் தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் ஐயர் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், இலங்கை பிளவுபடுவதைத் தடுக்கவும், தமிழ்நாட்டில் பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டக்கூடிய எந்தவொரு தாக்கத்தையும் தடுக்கவும், 1987 ஒப்பந்தத்தையும் இந்திய அமைதிப் படையை அனுப்பும் முடிவையும் மணி சங்கர் ஐயர் ஆதரித்துள்ளார்.

இலங்கையின் சிதைவு, இந்தியாவில் சிதைவை ஏற்படுத்தும் என்பதையும் ராஜீவ் அறிந்திருந்தார், என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும் இந்திய இராணுவம் அவரை ஏமாற்றியது, இந்திய உளவுத்துறை அவரை ஏமாற்றியது என்று மணி சங்கர் ஐயர் குற்றம் சுமத்தினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அரசியல் நோக்கங்கள் எமக்கு முக்கியமல்ல – பிரதமர் ஹரினி!

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு...

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...