Home தாயகச் செய்திகள் ரணிலின் கைது அரசின் அரசியல் பழிவாங்கலே – மஹிந்த கவலை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ரணிலின் கைது அரசின் அரசியல் பழிவாங்கலே – மஹிந்த கவலை!

Share
Share

அரசியல் பழிவாங்கல்களைத் தவிர இந்த அரசால் வேறு எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ரணில் விக்கிரமசிங்கவை இன்று முற்பகல் சிறைச்சாலை வைத்தியசாலையில் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே மஹிந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அரசியல் தலைவர்கள் சிறிய குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்படுவது குறித்து தனது வருத்தத்தையும் மஹிந்த இதன்போது வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நீங்கள் அரசியலில் ஈடுபட்டால், அது உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் ஒரு பகுதி. தற்போதைய அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் சரியான புரிதலைக் கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் பழிவாங்கும் செயல்களைத் தவிர வேறொன்றும் இல்லை. மக்கள் அரசியல் தலைவர்களைத் தொடர்ந்து ஆதரித்து வருகின்றார்கள். நாம் மக்களை நேசிக்கின்றோம். அதனால்தான் மக்கள் நம்மை நேசிக்கின்றார்கள்.” – என்றார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

எங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசியமில்லை – தேசிய மக்கள் சக்திக்க சி.வி.கே அறிவுரை!

சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில் – கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி...

திருமலை விவகாரம்; பிக்குவின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலை மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பிலான...

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...