யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் வளவில் இருந்து நேற்று பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொட்டடிப் பகுதியில் உள்ள வீடொன்றில் மலசல கூடத்துக்கு குழி வெட்டியபோது, சந்தேகத்துக்கு இடமான பொதி காணப்பட்டமையால், அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
பொலிஸார் வந்து பொதியைப் பார்வையிட்ட பின்னர், அது தொடர்பில் யாழ்.நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்து, அகழ்வுப் பணிக்கு அனுமதி பெற்றனர்.
இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள்முன்னெடுக்கப் பட்டு பொதிகள் மீட்கப்பட்டன.
குறித்த பொதிகளில் இருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் 30 மற்றும் அவற்றுக்குரிய 05ஆயிரம் ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த ஆயுதங்கள் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
Leave a comment