Home தாயகச் செய்திகள் யாழில் விபத்தில் சிக்கிய முதியவர் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழில் விபத்தில் சிக்கிய முதியவர் மரணம்!

Share
Share

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை
பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளார்.

நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய முதியவரே உயிரிழந்தவர் ஆவார்.

இந்த முதியவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கடந்த 5ஆம் திகதி புன்னாலைக்கட்டுவன் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது கனரக வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவத்தில் கணவனும் மனைவியும் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்
கப்பட்டனர். அவர்களில் கணவரே சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அரசியல் நோக்கங்கள் எமக்கு முக்கியமல்ல – பிரதமர் ஹரினி!

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு...

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...