யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் போதை மாத்திரை விற்பனையாளர் மற்றும் அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். குற்றத் தடுப்பு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
20 மற்றும் 22 வயதுடைய நபர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 110 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment