யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் அவதானிக்கப்பட்ட வெடி பொருட்களை வெள்ளிக்கிழமை (22) மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் இதனைப் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் முன்னிலையில், யாழ்ப்பாண பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், தடயவியல் பொலிஸார் வெடி பொருட்களை மீட்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Leave a comment