Home தாயகச் செய்திகள் யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளைஞர் சாவு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளைஞர் சாவு!

Share
Share

யாழ்ப்பாணத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் – சிவலிங்கப் புளியடியைச் சேர்ந்த 26 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மேற்படி இளைஞர் கடந்த 5 வருடங்களாக ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மயக்கமடைந்த நிலையில் வீட்டில் காணப்பட்டுள்ளார்.

அதனையடுத்து, நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

செம்மணியில் இன்று 07 எலும்புக்கூடுகள் அடையாளம்! இதுவரை 72 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்று திங்கட்கிழமை 7 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன....

உதைப்பந்தாட்டக் கோல் கம்பம் வீழ்ந்து இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக மரணம் – நாவாந்துறை விளையாட்டுக் கழக மைதானத்தில் துயரம்!

யாழ். நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் உதைப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கோல் கம்பம்...

வட்டுக்கோட்டை வன்முறை; நடந்தது என்ன? (படங்கள்)

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் பகுதியில் நேற்று இரண்டு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்துப்...

தெற்கில் பாதாளக் குழுக்களுக்கிடையேயான மோதலே துப்பாக்கிச்சூடுகளுக்குக் காரணம் – அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவிப்பு!

தெற்கில் பாதாளக் குழுக்களுக்கிடையிலான மோதல்களே தொடர்ச்சியான  துப்பாக்கிப் பிரயோகங்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது என்று பொதுமக்கள்...