யானைகள் இறப்பு வீதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு மன்றம் தெரிவிக்கிறது.
நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 288 யானைகளின் இறப்புகள் பதிவாகியுள்ளன. இதே நேரம், 2020 முதல் 2024 வரை, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தன.
வேட்டையாடுதல், தொடருந்து மோதல்கள் மற்றும் மனித – யானை மோதல் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
பெரும்பாலும் யானைகளின் தந்தங்களைப் பெற்று அதிக விலையில் விற்பனை செய்யும் நோக்கத்துடனேயே யானைகள் கொல்லப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
Leave a comment