Home தாயகச் செய்திகள் மேலும் ஐந்து எலும்புத் தொகுதிகள் மீட்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மேலும் ஐந்து எலும்புத் தொகுதிகள் மீட்பு!

Share
Share

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிள் இன்றைய அகழ்வின் போது 5 எலும்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 52 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகளின் 12 ஆம் நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது.

இன்றைய அகழ்வின் போது 5 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 52 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 47 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும் குழப்பகரமான முறையில் குவியல்களாக இருந்த 4 மனித எச்சங்களும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மனிதப் புதைகுழியிள் இருந்து பிளாஸ்டிக் மாலை, ஆடைகள், நாணயக் குற்றிகள் என்பனவும் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான ராஜ் சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல், சட்டத்தரணிகளான ஞா.ரனிதா, வி.கே.நிரஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சித்துப்பாத்தி மயானம் எங்கும் புதைகுழிகள் – சிரமதானத்தின்போது எலும்பு எச்சங்கள் அடையாளம்!

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதியைச் சூழ...

இரண்டு கோடி ரூபா பெறுமதியானகேரள கஞ்சா மன்னாரில் சிக்கியது!

இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்படி மன்னாரில் 2 கோடி ரூபா பெறுமதியான கேரள...

தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு!

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன....

கடலில் தத்தளித்த இந்திய மீனவர்களை மீட்டது இலங்கைக் கடற்படை!

சிலாபம் அருகே கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்....