Home தென்னிலங்கைச் செய்திகள் முன்னாள் எம்.பிக்கள் 500 பேரின் ஓய்வூதியம் இரத்தாகும் நிலை!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

முன்னாள் எம்.பிக்கள் 500 பேரின் ஓய்வூதியம் இரத்தாகும் நிலை!

Share
Share

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியம் இரத்துச் செய்யப்பட்டால் 500 வரையான முன்னாள் எம்.பிக்கள் ஓய்வூதியக் கொடுப்பனவை இழப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் எம்.பிக்களின் ஒன்றியம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது என்று சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“ஓய்வூதியக் கொடுப்பனவில் வாழும் முன்னாள் எம்.பிக்கள் இந்த முடிவால் பாதிக்கப்படுவார்கள். சிலர் மருத்துவ செலவுகளைக்கூட கவனிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.” – என்று மேற்படி ஒன்றியத்தின் செயலாளர் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

எனவே, ஓய்வூதியக் கொடுப்பனவை அரசு இரத்துச் செய்யக்கூடாது எனவும், அது ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...

மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளர்களுக்கு பெரும் சிரமம்!

கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8...