வடக்கு மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறேன் என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
‘இந்த விடயத்தை நான் முறையாக கட்சிக்கு அறிவிக்கவுள்ளேன். எனினும், எனது வேட்புமனுவை அங்கீகரிப்பதோ அல்லது நிராகரிப்பதோ கட்சியின் முடிவைப் பொறுத்தது. என்னை விட பொருத்தமான ஒரு வேட்பாளரை முதலமைச்சர் பதவிக்கு கட்சி
அடையாளம் கண்டால் கட்சியின் முடிவுக்கு நான் முழுமையாகக் கட்டுப்படுவேன்’, என்றும் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் அரசியல் குழு கூட்டத்தின் பின்னர் அவர் இந்த விடயத்தை
ஊடகங்களிடம் தெரிவித்தார்.
Leave a comment